Skip to main content

காரைக்குடி சிக்கன் கறி

காரைக்குடி சிக்கன் கறி

சுவையான காரைக்குடி சிக்கன் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம் 


தேவையானவை:
  1. சிக்கன் - அரை கிலோ
  2. வெங்காயம் - ஒன்று (பெரியது)
  3. தக்காளி - 2
  4. கறிவேப்பிலை - 2 கொத்து
  5. சோம்பு - கால் தேக்கரண்டி (தாளிக்க)
  6. உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
  7. சாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் - 2 (அ) மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  9. இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - சிறிது
  11. அரைக்க:
  12. மிளகு - ஒரு தேக்கரண்டி
  13. சீரகம் - ஒரு தேக்கரண்டி
  14. காய்ந்த மிளகாய் - 6
  15. தனியா - 4 தேக்கரண்டி
  16. பட்டை - ஒரு துண்டு
  17. கிராம்பு - 5
  18. ஏலக்காய் - 4
  19. மராத்தி மொக்கு - சிறிது
  20. ஜாதிக்காய் - கால் பாகம்
  21. கறிவேப்பிலை - 8 கொத்து
  22. தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி


செய்முறை :-

  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.
  2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.
  3. அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும்.
  5. ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்).
  7. அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
  9. தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்).
  10. சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும்.
  11. பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
  12. சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார்.

Comments

Popular posts from this blog

செட்டிநாடு சாம்பார் பொடி தயாரிக்கும் முறை

செட்டிநாடு சாம்பார் பொடி தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது . தேவையான பொருட்கள் : சிவப்பு மிளகாய் – 1 கிலோ மல்லி – 1 கிலோ சோம்பு -200 கிராம் சீரகம் – 200 கிராம் வெந்தயம்- 100 கிராம் பெருங்காயம் – 50 கிராம் மஞ்சள் -50 கிராம் மிளகு – 50 கிராம் கடலை பருப்பு-100 கிராம் துவரம் பருப்பு- 50 கிராம் பச்சரிசி – 50 கிராம். செய்முறை : ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய...

செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு காளான் மசாலா 😍😙😍 தேவையான பொருட்கள் : காளான் - அரை கிலோ எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் பட்டை - ஒன்று லவங்கம் - ஒன்று ஏலக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 200 கிராம் தக்காளி - இரண்டு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு கறிவேப்பில்லை - சிறிதளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் தனியா தூள் - இரண்டு டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிளகு தூள் - அரை டீஸ்பூன் சீரக தூள் - அரை டீஸ்பூன் சோம்பு தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை :   வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.   வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள்...

சிக்கன் சுக்கா வறுவல்

 சிக்கன் சுக்கா வறுவல் சிக்கன் சுக்கா வறுவல் வறுவல் வகைகளில் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா வறுவல். செட்டிநாடு மசாலா கலவையில் சிக்கனை வறுத்து சாப்பிட்டுப் பாருங்கள், ருசி நாக்கில் தாண்டவம் ஆடும். தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ வெந்தயம் - ஒரு டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4 மிளகு, சோம்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன் மராட்டி மொக்கு - 3 அன்னாசிப்பூ - 3 கடற்பாசி - 5 இதழ் தனியா - 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 பச்சைமிளகாய் - 4 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் வெங்காயம் - 250 கிராம் (நறுக்கியது) தக்காளி - 250 கிராம் (நறுக்கியது) மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப கொப்பரைத் தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம். செய்முறை :   வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகாய், லவங்கம், ஏலக்காய், பட்டை, கடல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை (தேவைப்பட்டால் கொப்பரைத் தேங்காய் சேர்க்கலாம்) ஆகியவற்றை வெறுமனே வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.   அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய்...