Skip to main content

தக்காளி ப்யூரி & Storage tips

  அவசரமான உலகில் நாம் அனைவரும் கடிகாரத்தின் நொடிமுள் போல ஓடிக்கொண்டிருக்கிறோம் ... காலை எழுந்து அனைத்தையும் சமைத்துவிட்டு  வேலைக்கு செல்வது கடினமாகிவிட்டது .. அப்போது இந்த தக்காளி ப்யூரி செய்து வைத்து கொண்டால்  soup , spaghetti , pasta , chutney , ஆகிய dish களுக்கு base ஆக பயன்படுத்திக்கொள்ளலாம்  . 



தேவையான பொருட்கள் 

தண்ணீர் 

தக்காளி  5

Vinegar or Lime juice


செய்முறை 

பாத்திரத்தில் வேகவைக்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும் 

தண்ணீரை கொதிக்க விட வேண்டும் 

பிறகு நன்கு கொதித்தவுடன் தக்காளியை அதில் போட வேண்டும் .

பின்பு தக்காளியின் தோல் உரியும் வரை வேகவைக்க வேண்டும் .

தோல் உரியும் பொழுது stove வை Off செய்து விட்டு ஆறும் வரை காத்திருக்க வேண்டும் .

பின்பு தக்காளியை எடுத்து தோல் உரித்து வைக்க வேண்டும் .

பிறகு Mixie  ல் நன்கு அரைத்து கொள்ள வேண்டும் ..

தக்காளி ப்யூரி ready !!!


"அந்த தக்காளி ப்யூரி யை அப்போதே உபயோகம் செய்யலாம்" 

"அதை பதப்படுத்தியும் வைத்துக்கொள்ளலாம்" .


பதப்படுத்தும் முறை 

நன்கு அரைத்து எடுத்த பின்பு  அதை நன்கு வடிகட்டி கொள்ளவேண்டும் (தக்காளி விதைகள் இல்லாமல்) .

பின்பு அதில் 3 tsp vinegar அல்லது lime juice சேர்த்து 

ice tray ல்  ஊற்றி freezer வைத்து ..அவை ஐஸ் ஆக மாறிய பின்பு 

ZIPLOCK cover ல் வைத்து freezer ல் வைத்து விடலாம் ..

மூன்று மாதம் வரை இதை பயன் படுத்தலாம் 


"மேலும் விவரங்களுக்கு கீலே விடியோவை பார்க்கவும் "

VIDEO LINK : How to make Tomato puree in Tamil






Comments

Popular posts from this blog

செட்டிநாடு சாம்பார் பொடி தயாரிக்கும் முறை

செட்டிநாடு சாம்பார் பொடி தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது . தேவையான பொருட்கள் : சிவப்பு மிளகாய் – 1 கிலோ மல்லி – 1 கிலோ சோம்பு -200 கிராம் சீரகம் – 200 கிராம் வெந்தயம்- 100 கிராம் பெருங்காயம் – 50 கிராம் மஞ்சள் -50 கிராம் மிளகு – 50 கிராம் கடலை பருப்பு-100 கிராம் துவரம் பருப்பு- 50 கிராம் பச்சரிசி – 50 கிராம். செய்முறை : ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய...

செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு காளான் மசாலா 😍😙😍 தேவையான பொருட்கள் : காளான் - அரை கிலோ எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் பட்டை - ஒன்று லவங்கம் - ஒன்று ஏலக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 200 கிராம் தக்காளி - இரண்டு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - இரண்டு கறிவேப்பில்லை - சிறிதளவு மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் தனியா தூள் - இரண்டு டீஸ்பூன் உப்பு - தேவைகேற்ப மிளகு தூள் - அரை டீஸ்பூன் சீரக தூள் - அரை டீஸ்பூன் சோம்பு தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை :   வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.   வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள்...

சிக்கன் சுக்கா வறுவல்

 சிக்கன் சுக்கா வறுவல் சிக்கன் சுக்கா வறுவல் வறுவல் வகைகளில் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா வறுவல். செட்டிநாடு மசாலா கலவையில் சிக்கனை வறுத்து சாப்பிட்டுப் பாருங்கள், ருசி நாக்கில் தாண்டவம் ஆடும். தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ வெந்தயம் - ஒரு டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4 மிளகு, சோம்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன் மராட்டி மொக்கு - 3 அன்னாசிப்பூ - 3 கடற்பாசி - 5 இதழ் தனியா - 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 பச்சைமிளகாய் - 4 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் வெங்காயம் - 250 கிராம் (நறுக்கியது) தக்காளி - 250 கிராம் (நறுக்கியது) மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப கொப்பரைத் தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம். செய்முறை :   வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகாய், லவங்கம், ஏலக்காய், பட்டை, கடல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை (தேவைப்பட்டால் கொப்பரைத் தேங்காய் சேர்க்கலாம்) ஆகியவற்றை வெறுமனே வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.   அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய்...